ஆப்கான்: மசுதியில் வெடித்த குண்டுவெடிப்பில் 50 பேர் பலி?

ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-10-08 12:41 GMT

ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியேறியது. அப்போது தாலிபான்கள் முழு நாட்டையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதன் பின்னர் பல்வேறு குற்றச்சம்பவங்கள் அந்நாட்டில் நடைபெற்ற வண்ணம் உள்ளது. கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு சர்வ சாதாரணமாகவும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், குந்தூஸ் நகரில் உள்ள மசூதி ஒன்றில் குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்தாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. எந்த பயங்கரவாத குழு என்பது இதுவரையும் தெரியவில்லை.

Source, Image Courtesy: Dinakaran


Tags:    

Similar News