பிரதமர் மோடி பொது கூட்டத்தில் குண்டுவெடிப்பு: காரணமானவரை கண்டுபிடித்து பீகார் போலீசார் அதிரடி!

பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது தொடர்பாக என்.ஐ.ஏ காவலில் இருந்து தப்பியவர் 10 ஆண்டுகளுக்குப் பின் பீகார் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-23 00:45 GMT

பீகார் தலைநகர் பாட்னா காந்தி மைதானத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி பாரதிய ஜனதா தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இதில் பிரதமர் மோடி உரையாற்றுவதற்கு இருந்தார். இந்த மைதானத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது. இதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் .    70-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக மெஹர் ஆலம் என்பவர் உட்பட பலரை தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதில் மெகர் ஆலம் என்.ஐ.ஏ காவலில் இருந்து தப்பி ஓடினார். சுமார் 10 ஆண்டுகளாக தலைமுறைவாக இருந்த அவரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தர்பங்கா நகரில் நேற்று முன்தினம் மாலையில் சிறப்பு அதிரடி போலீசார் நடத்திய தேர்தல் வேட்டையில் மெகர் ஆலம் சிக்கினார். அவரை கைது செய்தவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News