ஆப்கன்: காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை !

ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-08-29 13:34 GMT

ஆப்கனில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியதைத் தொடர்ந்து, அங்கு அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில் தொடர்ச்சியாக அமெரிக்கர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அந்நாட்டு மக்களும் அங்கிருந்த வெளியேற முயற்சி செய்கின்றனர். எனவே ஆப்கானிஸ்தானில் இருக்கும் தன்னுடைய நாட்டு மக்களை மீட்டு வர அந்த நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றனர். அமெரிக்க விமானங்கள் மற்றும் விமானப்படைகள் மூலம் இதுவரை 1,12,000 பேர் வெளியேறினர். இன்னும் பலர் வெளியேற முயற்சிப்பதாக தெரிகிறது.


இந்நிலையில் கடந்த வியாழன் அன்று அமெரிக்க ராணுவத்தை குறிவைத்து காபூல் விமான நிலையத்தில் ISIS அமைப்பினர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்பட 100 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க ராணுவம் டரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் இதுபற்றி கூறுகையில், "காபூலில் நிலவரம் தொடர்ந்து மிகவும் அபாயகரமானதாக உள்ளது. விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் அதிகளவில் உள்ளது. 


அடுத்த 2, 3 நாட்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து, விமான நிலையம் மற்றும் அங்கு வெளியில் இருக்கும் பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக, காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.  எனவே நிச்சயமாக சில நாட்களில் அங்கு பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற உள்ளது என்ற அமெரிக்கா திட்டவட்டமாக கூறியுள்ளது.

Input:https://www.cnn.com/2021/08/28/politics/biden-behind-scenes-crisis-attack-kabul-afghanistan/index.html

Image courtesy:CNN news


Tags:    

Similar News