இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் !

Weather Prediction.

Update: 2021-08-24 04:59 GMT

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட  செய்திக்குறிப்பில்  கூறியதாவது : தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், இடி, மின்னலுடன், இன்று கன மழை பெய்யும்.

மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில், மிதமான மழை பெய்யும்.தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில், வரும், 27ம் தேதி வரை மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.  

இவ்வாறு  சென்னை வானிலை ஆய்வு மையம் கூறப்பட்டுள்ளது.

Image : TOI


Dinamalar

Tags:    

Similar News