2G விசாரணை தொடங்கியது! நீலகிரி,தூத்துக்குடி தொகுதிகளுக்கு இடைத்தேர்தலா! வழக்கை விரைவில் முடிக்க திட்டம்.!

2G விசாரணை தொடங்கியது! நீலகிரி,தூத்துக்குடி தொகுதிகளுக்கு இடைத்தேர்தலா! வழக்கை விரைவில் முடிக்க திட்டம்.!

Update: 2019-10-25 02:45 GMT

சென்ற காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மிக பெரிய முறைகேடு 2ஜி அலைக்கற்றை முறைகேடு. இந்த முறைகேட்டில் காங்கிரஸ் கூட்டணியில் பங்கு வகித்த திமுகவை சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா முன்னாள் முதல்வர் கருணாநிதி மகள் கனிமொழி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து இருவரும் 2017 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கபட்டனர்.


இதை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் வழக்கு தொடர்ந்தது சி.பி.ஐ இதற்கான விசாரணையை நேற்று துவங்கியது உயர் நீதி மன்றம் சிபிஐ தரப்பில் வாதங்கள் நேற்று நடைபெற்றது.


இந்த வழக்கனது நீதிபதி பிரிஜேஷ் சேத்தி தலைமையில் , நேற்று ஆரம்பித்தது.CBI தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், சஞ்சய் ஜெயின், வாதாடினார் அவர் 2ஜி வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட, FIR (முதல் தகவல் அறிக்கை) வழக்கின் குற்றப்பத்திரிகையை வாசித்தார் சட்ட விரோதமாக தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றையை வழங்குவதற்கு மத்திய அரசு அதிகாரிகள்மற்றும் அப்போதைய அமைச்சர் ஆ.ராசா சதித்திட்டம் தீட்டியது பற்றி, விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளோம் என வாதத்தை முன் வைத்தார்.


இந்த வழக்கு விசாரணையை, நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.


இந்த வழக்கினை விரைவில் முடிக்க சிபிஐ தரப்பு முடிவெடுத்துதுள்ளது.இது மட்டுமில்லாமல் 2 ஜி குறித்து முக்கிய தகவல்களை கொடுத்தது தி.மு.க வின் முக்கிய புள்ளி என்றும் செய்திகள் உலா வருகிறது. இதனால் கட்சிக்குள்ளும் பெரிய இடி விழப்போகிறது. இந்த முறை திகார் கன்பார்ம் என்கின்றனர் சி.பி.ஐ


இனி எதோ தி.மு.க வை வச்சு செய்யப் போகிறது என்று மட்டும் நன்றாக புரிகிறது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ.


Similar News