கொரோன வைரஸ் நடவடிக்கை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை!

கொரோன வைரஸ் நடவடிக்கை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை!;

Update: 2020-03-24 11:29 GMT

சீனாவில் இருந்து பரவி கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ், இதனால் இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கையாக அனைத்து மாநில அரசுக்கு மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியது:

மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், தனி வார்டுகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றறை எதிர்கொள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு விடவேண்டும்.

செயற்கை சுவாச கருவிகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், முக கவசங்கள், மருந்துகளை தயாராக வைக்க வேண்டும். மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை அமைக்க தேவையான நிதி ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News