பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ கிளிப்புகள்: பல பெண்களின் வாழ்க்கை சீரழித்த கிறிஸ்தவ பாதிரியார்!

தொடர்ச்சியாக தலைமறைவாக இருக்கும் பாதிரியாரின் லேப்டாப்பில் இருந்து பல்வேறு வீடியோக்களை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள்.

Update: 2023-03-21 01:22 GMT

குமரி மாவட்டம் விளங்கோடு பகுதியை சேர்ந்தவர் பாதிரியார் பெனெட்டிங் ஆண்ட்ரூ என்பவர், இவர் அந்த பகுதியில் உள்ள தேவாலயங்களில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாகவே இவருடைய தொடர்புடைய பல்வேறு பெண்களுக்கு சமூக வலைதளங்களில் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் தொந்தரவுகளை செய்து வருவதாக கூறப்பட்டு இருக்கிறது. மேலும் இவருடைய இந்த ஒரு சதி திட்டத்தில் பல்வேறு பெண்கள் சிக்கி தங்களுடைய வாழ்க்கையை சீரழித்து இருக்கிறார்கள்.


தேவாலயங்களில் பிரார்த்தனைக்காக வரும் பெண்களிடம் இது போன்ற தவறான செயல்களில் இவர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்து இருக்கிறது.  இதன் காரணமாக தற்பொழுது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குறிப்பாக பாதிக்கப்பட்ட நர்சிங் மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஐந்து பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்த முடிவு செய்தார்கள்.


ஆனால் அதற்குள் பாதிரியார் தற்பொழுது மறைவாகி இருக்கிறார். இவரை பிடிப்பதற்கு தனி படை தற்போது அமைக்கப்பட்டு இருக்கிறது. அதனுடைய பெயரில் அமைக்கப்பட்ட தனிப்படை இவருடைய வீடுகளில் சோதனை மேற்கொண்டது. அப்போது இவருடைய லேப்டாப்பில் பல்வேறு பெண்களின் வீடியோக்கள் இடம் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் வீடியோக்களை பயன்படுத்தி பெண்களை மிரட்டி பல்வேறு செயல்களில் இவர் ஈடுபட்டு இருப்பது தெரியவந்து இருக்கிறது. உடனடியாக தனிப்படை மூலம் இவர் கைது செய்யப்படுவார் என்று போலிஸ் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

Input & Image courtesy: Maalaimalar News

Tags:    

Similar News