உலகளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா ! : மருத்துவ நிபுணர்களின் கருத்து !

உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பற்றி மருத்துவ நிபுணர்கள் கருத்து.

Update: 2021-08-08 13:20 GMT

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தன்னுடைய கைப்பிடியில் வைத்து உள்ளது என்று சொல்லலாம். எனது ஒவ்வொரு அலையின் போதும் அது ஏற்படுத்திய பாதிப்புகள் ஏராளம். அந்த வகையில் தற்பொழுது, உலக அளவில் கரோனா பாதிப்பு 20 கோடியை கடந்துள்ளது என்று கொரோனா பரவலை பற்றி அறிய உதவும் வோல்டோ மீட்டர் இணைய பக்கம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து வோல்டோ மீட்டர் இணைய தளத்தில் வெளியான தகவல் படி, உலக நாடுகளில் கொரோனா பரவல் 20 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை 18 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவிலிருந்து மீண்டு உள்ளார்கள். 42 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.


கொரோனா பாதிப்பில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும், ரஷ்யா நான்காம் இடத்திலும், பிரான்ஸ் ஐந்தாம் இடத்திலும் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இறுதியில், கொரோனா பரவல் சீனாவில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தற்பொழுது உருமாற்றம் அடைந்து, முதல் அலை, இரண்டாம் அலை என்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.


இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் இதுவரை 132 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாகவே உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் அதிக அளவில் பரவி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் தெரிவித்தது. டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா, இந்தோனேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அனைத்து மக்களுக்கும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளார்கள். 

Input:  https://www.nytimes.com/2021/08/04/world/europe/covid-global-cases-200-million.html

Image courtesy: wikipedia 




Tags:    

Similar News