விராட் கோலி மற்றும் இந்தியா அணிக்கு கொலை மிரட்டல் - என்.ஐ.ஏ.-க்கு கடிதம் - கடிதத்தில் முக்கிய தலைவர்களின் பெயர்கள்.!

விராட் கோலி மற்றும் இந்தியா அணிக்கு கொலை மிரட்டல் - என்.ஐ.ஏ.-க்கு கடிதம் - கடிதத்தில் முக்கிய தலைவர்களின் பெயர்கள்.!

Update: 2019-10-30 05:30 GMT

வங்காளதேச அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டி20 தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் தொடர்களை விளையாட இருக்கிறது .


முதல் டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வருகின்ற 3-ந்தேதி நடைபெறுகிறது . இந்த போட்டியின் போது இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் மற்றும் இந்திய அணிக்கும் மீதும் தாக்குதல் நடத்த இருப்பதாக கேரளா மாநிலம் கோழிக்கோட்டை மையமாக வைத்து இயங்கும் ஆல் இந்தியா லஷ்கர் இயக்கம் என்.ஐ.ஏ.-க்கு பெயரிடப்படாத கடிதம் வந்துள்ளது.


இதனால் நடைபெறும் போட்டியகளில் விளையாடும் இந்தியா அணிக்காக பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என டெல்லி போலீஸ்க்கு என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.


அந்த கடிதத்தில் விராட் கோலி பெயர் உள்ளதாகவும், அவர் இந்த டி20 போட்டிகளில் விளையாடவில்லை என அனைவருக்கும் தெரிந்ததே , மேலும் கடிதத்தில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், உள்துறை மந்திரி அமித்ஷா, அத்வானி, பா.ஜ.க செயல்தலைவர் ஜே.பி. நட்டா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரின் பெயரும் இருந்ததாக டெல்லி போலீஸ் தகவல் தெரிவித்தன.


Similar News