மின் கட்டணம் செலுத்த மே 6ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு.!

மின் கட்டணம் செலுத்த மே 6ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு.!

Update: 2020-04-14 05:06 GMT

கோலிட் -19 பரவுதலால் 24.03.2020 நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தியதன் காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்களின் மின்னிணைப்புகளுக்கு மின் கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கெடு நாள் 25.03.2020 முதல் 14.04 . 2020 வரை இருக்குமாயின். அதற்கான தாமதக் கட்டணம் மற்றும் மின் துண்டிப்பு / மறு இணைப்புக் கட்டணமின்றி 14.04.2020 வரை கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது .

தற்பொழுது தமிழ்நாடு அரசு 30.04.2020 வரையிலான காலத்திற்கு ஊரடங்கு உத்தரவினை நீட்டிப்பு செய்ததற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் மின்கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கெடு நாள் 25.03.2020 முதல் 30.04.2020 வரை இருக்குமாயின் , அத்தொகையினை செலுத்த 06.05. 2020 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 30ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் அதற்கு முந்தைய மாதங்களில் கணக்கிடும் பட்டியல் படி மின் கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செலுத்தப்படும் மின் கட்டணம் பின்வரும் மாதக் கணக்கீட்டு மின் கட்டணத்தில் சரி கட்டல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது, பயனீட்டாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நெட் பேங்கிங் மொபைல் பேங்கிங் மூலம் மின் கட்டணங்களை செலுத்தி மின்கட்டண கவுண்டர்களுக்கு வருவதை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கேட்டுக் கொண்டுள்ளது.

Similar News