மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைக்குழு.. இலங்கை அமைச்சர் தகவல்!

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி விசாரணைக்குழு அமைத்து தீர்வு காணப்படும் என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் கூறியுள்ளார்.

Update: 2021-09-05 05:41 GMT

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி விசாரணைக்குழு அமைத்து தீர்வு காணப்படும் என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் பங்கேற்றார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை அகதிகளை மறு வாழ்வு மையம் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் மாற்றம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. மேலும், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைத்து தீர்வு காணப்படும் என்றும் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் கூறினார்.

Source, Image Courtesy: News 7

https://news7tamil.live/fisherman-issue-srilankan-minister.html

Tags:    

Similar News