38 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு: 2 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை?

38 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் மிகப்பெரிய எரிமலை வெடித்தது இருக்கிறது. இதன் காரணமாக 2 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை.

Update: 2022-12-02 02:32 GMT

அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு 38 ஆண்டுகளுக்கு பின்பு வெடித்தது. இதன் காரணமாக 2 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவின் மேற்கே பசிபிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ள ஹவாயில் மௌன லோவா என்று எரிமலை உள்ளது. இது உலகின் மிகப்பெரிய இருமலையாகும். 38 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டு இருக்கிறது.


பெரிய அளவிலான நிலநடுக்கங்களை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு எரிமலை வெடிப்பு தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். எனினும் அது தற்போது எரிமலை வாயில் விளிம்புகளுக்கு உள்ளாக முடிந்திருக்கின்றன என்றும், எனவே அது குறித்து அச்சுறுத்தல்கள் தற்போது இல்லை என்று அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.


இருந்தாலும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. எரிமலை குழம்பு குடியிருப்பு பகுதிகளை நோக்கி செல்ல தொடங்கியதால் அங்கிருந்து வெளியேற தயாராக இருக்குமாறு தீவில் இருக்கும் சுமார் 2 லட்சம் மக்களை அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Indian Express

Tags:    

Similar News