குளக்கரையில் சிலுவை உண்ட முயற்சித்த நபர்கள் - தடுத்து நிறுத்திய இந்து முன்னணி!

தஞ்சை மாவட்டம் குளக்கரையில் சிலுவை ஊண்றி கொட்டகை போட முயற்சி இந்துமுன்னணி தடுத்து நிறுத்தம்.

Update: 2022-11-10 06:17 GMT

தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள குளக்கரையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலுவையை ஊன்றி அங்கு கொட்டகை போட முயற்சித்து இருக்கிறார்கள். இது தொடர்பாக செய்தியை அறிந்து ஹிந்து முன்னணி அங்கு சென்று இருக்கிறது. இந்து முன்னணியின் தீவிர முயற்சி காரணமாக அங்கிருந்த சிலுவை அகற்றப்பட்டு இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் தங்களுடைய மதத்தை பரப்புவதற்காக கிறிஸ்துவ மிஷனரிகள் ஆங்காங்கே பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக இந்த மிஷனரிகள் தங்களுடைய மதத்தை ஏழை,எளிய மக்கள் இருக்கும் இடத்தை நோக்கி உதவிகள் என்ற பெயரில் அவர்களை குறி வைப்பது கிறிஸ்துவ மிஷனரிகளின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.


அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள குளக்கரையில் மரங்களுக்கு இடையில் நடப்பட்ட சிலுவை காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக கிறிஸ்துவ மிஷனரிகள் அங்கு சிலுவையை ஊன்றி அந்த இடத்தை தனது தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள முயற்சித்து வந்து இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்து இருக்கிறது.


பின்னர் இது பற்றி செய்தியை அறிந்து இந்து முன்னணி அமைப்பினர் அங்கு சென்று சிலுவை நடப்பட்ட இடத்தை மீட்டு இருக்கிறார்கள். தங்கள் உரிமை மீட்கப்பட்டதாக இந்து முன்னணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 7ஆம் தேதி இந்த செய்தியை பகிர்ந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Twitter

Tags:    

Similar News