பாகிஸ்தானில் இந்து வியாபாரி கொலை: அச்சத்தில் சிறுபான்மை மக்கள்!

பாகிஸ்தானில் கொடுத்த கடனை கேட்ட இந்து வியாபாரியை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-01-02 12:20 GMT

பாகிஸ்தானில் கொடுத்த கடனை கேட்ட இந்து வியாபாரியை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தால் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், லஸ்பிலா என்ற நகரில் வசிந்து வந்தவர் ரமேஷ் லால் நந்த். இவர் அப்பகுதியில் வியாபாரம் செய்து வருகிறார். இவர் சிலருக்கு கடன் கொடுத்துள்ளார். அதனை வசூல் செய்வதற்காக சென்றுள்ளார்.

அப்போது இஸ்லாமியர்கள் சிலர் ரமேஷ் லாலை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு வசித்து வரும் சிறுபான்மையின மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஏற்கனவே பாகிஸ்தானில் இந்து கோயில்களை இஸ்லாமியர்கள் சூறையாடி வருகின்றனர். தற்போது இந்து வியாபாரி கொல்லப்பட்டுள்ளார். இதனால் அங்கு வசிக்கின்ற சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே தொடர்கிறது. 

Source: Dinamani

Image Courtesy:The Wire

Tags:    

Similar News