நேற்று பழுதடைந்த சாலைக்கு மலர் வளையம் வைத்து போராட்டம் நடத்திய இந்துமுன்னணி ! இன்று சாலைகள் சரி செய்யப்பட்டு வருகிறது !

Update: 2021-11-19 11:09 GMT

இராமேஸ்வரத்தில் பழுதடைந்த  சாலையை சரி செய்யக்கோரி, நேற்று இந்து முன்னணி நூதன போரட்டத்தை நடத்தியதன் விளைவாக இன்று அந்த   சாலைகள் சரி செய்யப்பட்டு வருகிறது. 

 இராமேஸ்வரத்தில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சரிசெய்யக்கோரி சாலைக்கு மலர் வளையம் வைத்து இந்துமுன்னணி நேற்று  நூதன போராட்டம்  நடத்தியது. இது ராமேஸ்வரம் பகுதியில் பேசு பொருளாகியது.

இந்து முன்னணியின் நூதன போராட்டத்தின் விளைவாக இன்று அந்த பழுதான சாலைகள் சரி செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து இந்து முன்னணி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :

இராமேஸ்வரத்தில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை சரிசெய்ய கோரி சாலைக்கு மலர் வளையம் வைத்து போராட்டம் இந்துமுன்னணி நேற்று நடத்தியது இன்று சாலைகள் சரி செய்யப்பட்டு வருகிறது.இது இந்து முன்னணி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.  


Tags:    

Similar News