துப்பாக்கி சுட்டு சம்பவத்தை வழக்கு பதிவு செய்ய தயங்கும் அரசு - இம்ரான்கான் குற்றச்சாட்டு!

துப்பாக்கி சூட்ட சம்பவத்தை வழக்கு பதிவு செய்ய தயக்கம் காட்டுகிற போலீஸ் அதிகாரிகளை எதிர்த்து இம்ரான் கான் குற்றச்சாட்டு.

Update: 2022-11-08 03:21 GMT

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கடந்த மூன்றாம் தேதி பஞ்சாப் மாகாணம் பாஜிராபாத் நகரில் அரசுக்கு எதிரான நடந்த பேரணியில் பங்கேற்று பொழுது துப்பாக்கியால் சுடப்பட்டார. இதில் வலது காலில் கொண்டு பாய்ந்து காயமடைந்த அவருக்கு லாக்கூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் இம்ரான் கான் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்தவாறு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்பொழுது அவர் கூறுகையில் என் மீது கொலை முயற்சிக்கு பிரதமர் செரீப், உள்துறை மந்திரி மற்றும் பாதுகாப்பு ராணுவ உளவு பிரிவு தலைவர் ஆகியோரின் காரணம் அவர்களது பெயரை புகாரில் குறிப்பிட எனக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் ராணுவ அதிகாரிகள் பெயர் இருப்பதால் எனது புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்ய பஞ்சாப் மாகாண போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர்.


பிரதமர் மற்றும் உள்துறை மந்திரிக்கு எதிராக கூட அவர்கள் வழக்கு பதிவு செய்ய தயாராக இருக்கிறார்கள்..ஆனால் புகாரில் ராணுவ அதிகாரியின் பெயரில் நீக்கும் வரை வழக்கு பதிவு செய்ய முடியாது என்று கூறுகின்றனர். எனவே பாரபட்சம் என்று மற்றும் நியாயமான விசாரணைக்கு நடத்த புகாரியில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பேரையும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டு இருக்கிறார். தொடர்ச்சியாக பேரணியில் இனிமேல் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News