ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ்.!

புதிய சட்ட விதிகளுக்கு இணங்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2021-06-05 09:25 GMT

புதிய சட்ட விதிகளுக்கு இணங்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமூக வலைதளங்களை ஒழுங்குப்படுத்த மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய சட்டங்களை கடந்த பிப்ரவரி அறிவித்தது. புதி சட்டங்களை ஏற்றுக் கொள்வதற்கு சமூக வலைதளங்களுக்கு 3 மாதங்கள் மத்திய அரசு அவகாசம் வழங்கியது. இறுதி நேரம் கடந்த மே 25ம் தேதியுடன் நிறைவடைந்து, புதிய விதிகள் அமலுக்கு வந்தது.




 


புதிய விதிகளை ஏற்றுக்கொண்டு கூகுள், பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்கள் ஒத்துக்கொண்டு அதற்கான பணியை தொடங்கியுள்ளது. அனைத்து சமூக வலைதளங்களும் மத்திய அரசின் புதிய சட்டங்களை ஏற்றுக்கொண்ட நிலையில், ட்விட்டர் நிறுவனம் இதுவரை குறைதீர்க்கும் அதிகாரியை நியமனம் செய்யவில்லை.

இந்நிலையில், புதிய சட்டங்களின்படி இந்தியாவில் அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு இறுதி கெடு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை ஏற்காத பட்சத்தில் ட்விட்டர் நிறுவனம் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News