ஈஷாவின் மகா சிவராத்திரி நிறைவு விழா - அருமையாக அரங்கேறிய கர்நாடக இசைக் கச்சேரி!

ஈஷாக்கு நவராத்திரி திருவிழாவில் நிறைவு விழாவைப் தொடர்ந்து, கர்நாடகா இசை கச்சேரி அரங்கேறியது.

Update: 2022-10-06 02:42 GMT

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் பெண்களால், பெண்களுக்காக, பெண் தெய்வங்களை கொண்டாடும் பண்டிகைதான் நவராத்திரி.ஒன்பது இரவுகள் என்று பொருள்படும் நவராத்திரி, துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி வடிவங்களில் தெய்வீக வழிபாட்டை ஒவ்வொரு மூன்று நாட்களும் வழிபடுகிறார்கள். இருப்பினும், பத்தாவது நாள் மிக முக்கியமான நாளாகும். இது 'வெற்றியின் அடையாளமாகக் கொண்டாடப் படுகிறது.


இதனை விஜயதாசமி என்று அழைக்கப்படுகிறது. விஜயதசமி தினத்தில், அம்பிகை வெற்றி வாகை சூடினாள். ஆணவம், சக்தியாலும், வறுமை, செல்வத்தினாலும், அறியாமை, ஞானத்தாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் அது. ஆகவே அன்றைய தினம் மிகவும் சிறப்புமிக்கது. அன்று புதிதாகத் தொடங்கும் எந்தக் கலையும் எளிதாக வசமாகும் என்பது நம்பிக்கை. நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளும் இதுவே. இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரி திருவிழாவில் பண்டிகையை ஈஷா அமைப்பு சிறப்பாக கொண்டாடி வருகின்றது. 


நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஈஷாவில் தினமும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலை நிகழ்ச்சிகளை ஈஷா அமைப்பு ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது, நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஈஷாவில் தினமும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. நிறைவு நாளான (அக்.4) நேற்று ஸ்ரேயா தேவ்நாத், மயிலை கார்த்திகேயன், சுமேஷ் நாராயணன், அடையார் சிலம்பரசன் ஆகியோரின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது.

Tags:    

Similar News