உலகில் ஷியா முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் கொல்வோம்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் எச்சரிக்கை!

உலகில் உள்ள எந்த பகுதியில் ஷியா முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்களை நாங்கள் கொல்வோம் என்று ஐஎஸ் பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி கைப்பற்றினர். இதன் பின்னர் அங்கு அவர்கள் ஆட்சி நடத்தி வருகின்றனர். அப்போது அவர் ஆப்கன் மண்ணில் ஐஎஸ் பயங்கரவாதிகள் முழுமையாக அப்புறப்படுத்தப்படுவர் என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Update: 2021-10-18 11:18 GMT

உலகில் உள்ள எந்த பகுதியில் ஷியா முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்களை நாங்கள் கொல்வோம் என்று ஐஎஸ் பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி கைப்பற்றினர். இதன் பின்னர் அங்கு அவர்கள் ஆட்சி நடத்தி வருகின்றனர். அப்போது அவர் ஆப்கன் மண்ணில் ஐஎஸ் பயங்கரவாதிகள் முழுமையாக அப்புறப்படுத்தப்படுவர் என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தாலிபான்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆப்கானில் தாக்குதலை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஷியா முஸ்லிம்களை குறிவைத்து கொன்று வருகின்றனர். கடந்த 8ம் தேதி குண்டுஸ் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். அதில் பலர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து கடந்த 15ம் தேதி கந்தஹார் பகுதியில் உள்ள ஷியா மசூதி ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடிப்பில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்களுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்.

இது பற்றி ஐஎஸ் பயங்கரவாதிகள் ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளனர். உலகின் எந்த பகுதியில் ஷியா முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்கள் எங்கள் குறியில் இருந்து தப்ப முடியாது. எங்களின் தாக்குதலில் அவர்கள் கொல்லப்படுவார்கள். அதிலும் ஆப்கனில் உள்ள ஷியா முஸ்லிம்கள் மிகப்பெரிய தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தாலிபான்கள் என்ன செய்வது என்று விழிபிதுங்கி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் கூறுகின்றது.

Source, Image Courtesy: Dinamalar



Tags:    

Similar News