“முன் அனுமதியின்றி காஷ்மீர் சென்றது தவறு” - ராகுல் காந்திக்கு மாயவதி அறிவுரை!!

“முன் அனுமதியின்றி காஷ்மீர் சென்றது தவறு” - ராகுல் காந்திக்கு மாயவதி அறிவுரை!!

Update: 2019-08-26 08:11 GMT


நரேந்திர மோடி அரசு, காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த 5-ஆம் தேதி அதிரடியாக ரத்து செய்தது. காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது.


அங்கு, பள்ளி - கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளன. இதனால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. கட்டுப்பாடுகள் தளர்தப்பட்டு வருகிறது.




https://twitter.com/friendsofrss/status/1164475656844877824



காஷ்மீருக்கு  தனி அந்தந்ஸ்த வழங்கும் 370 வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு உலக நாடுகள் முதல் உள்ளூர் கட்சிகள் வரை அனைவரும் ஆதரித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் இந்த துணிச்சலான நடவடிக்கையை ஒவ்வொரு இந்தியனும் பாராட்டி,  கொண்டாடி வருகின்றனர்.


ஆனால், பாகிஸ்தான், பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதிகள், காங்கிரஸ்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


இதுதொடர்பாக டெல்லியில் தி.மு.க. ஏற்பாடு செய்து இருந்த போராட்டத்தில் 150 பேர் பங்கேற்றனர். 




https://kathirnews.com/2019/08/22/dmk-agitates-in-delhi-in-support-of-pakistan/



இந்த போராட்டத்திற்கு பாகிஸ்தான் ரோடியோ செய்தி வெளியிட்டு மகிழ்ந்தது. 


திமுகவின் போராட்டத்தில் கலந்து கொண்டு அசிங்கப்பட்ட தேச துரோகிகள், ராகுல் காந்தி தலைமையில் காஷ்மீர் செல்ல முடிவு செய்தனர். 


அதன்படி ராகுல் தலைமையில் சிலர் ஸ்ரீநகர் புறப்பட்டு சென்றனர். ஸ்ரீநகர் சென்ற அவர்களை வெளியே வர காஷ்மீர் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. 


காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர் குலைக்கவும், பாகிஸ்தானுக்கு தங்களின் விஸ்வாசத்தை உணர்த்தவும் தேச துரோகிகளின் நாடகத்தை நன்கு தெரிந்திருந்த காஷ்மீர் நிர்வாகம் அவர்களை துரத்தியடித்தது.


இதனால், அவர்கள் விமான நிலையத்தில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு, மீண்டும் விமாத்தில் டெல்லி திரும்பினார்கள்.


இதுதொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, “முன் அனுமதி பெறாமல் எதிர்க்கட்சியினர் காஷ்மீர் சென்றது தவறு” என்று குற்றம் சாட்டி உள்ளார்.


அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சில டுவீட்களைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர், “முன் அனுமதி பெறாமல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் காஷ்மீர் சென்றது தவறு. எதிர்க்கட்சியினர் காஷ்மீர் செல்வதற்கு முன்னதாகவே அனுமதி வாங்கியிருக்க வேண்டும். பாபா சாஹிப் அம்பேத்கர் எப்போதுமே சமத்துவம, ஒற்றுமை, ஒருமைப்பாட்டை வலியுறுத்தினார். அதனால்தான் அவர் ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ வரவேறவில்லை. இதனால்தான், பகுஜன் சமாஜ் கட்சியும் 370 சட்டப்பிரிவு நீக்கத்தை ஆதரித்தது. இந்திய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 69 ஆண்டுகளுக்குப் பின்னர் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப சில காலமாகலாம். அதனால் உச்ச நீதிமன்றமே கூறியிருப்பதுபோல் சில காலம் காத்திருக்கலாமே.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.




https://twitter.com/Mayawati/status/1165826550572470274



Similar News