முஸ்லிம் தோழிக்கு லிப்ட் கொடுத்தது ஒரு குத்தமா.. மருத்துவ மாணவன் மீது தாக்குதல்.. அதிர்ச்சி சம்பவம்!

இஸ்லாமிய வகுப்பு தோழிக்கு லிப்ட் கொடுத்ததற்காக இந்து இளைஞரை தாக்கிய முஸ்லிம் கும்பல்.

Update: 2023-06-01 04:13 GMT

கர்நாடகாவின் ஷிவமொக்காவில் உள்ள பத்ராவதி பகுதியில் வெறித்தனமான இஸ்லாமியர்களின் இந்து எதிர்ப்பு வன்முறையின் மற்றொரு அதிர்ச்சியூட்டும் வழக்கு பதிவாகியுள்ளது. 2023, மே 28 அன்று, மருத்துவ படிக்கும் ஒரு ஹிந்து மாணவன் தன்னுடைய வகுப்புத் தோழியை வீட்டில் இறக்கி விடுவதற்காக வந்து இருக்கிறார் இவருடைய வகுப்பு தோழி ஒரு இஸ்லாமியர். இந்த ஒரு குற்றத்திற்காக அந்த ஒரு இளைஞனை வெறித்தனமான ஒரு கும்பல் தாக்கி இருக்கும் சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா நகரில் வசிக்கும் பாதிக்கப்பட்ட இளைஞன் வினய் குமாரும், பத்ராவதியில் உள்ள கலந்தர் நகரைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணும் பாராமெடிக்கல் கல்லூரியில் ஒன்றாகப் படித்துள்ளனர். தனது சகோதரி விபத்தில் சிக்கியதால், மாணவி வினய் குமாரிடம் வீட்டிற்கு லிப்ட் கேட்டுள்ளார்.

அவசர உதவிக்காக அவரும் அந்த பெண்ணை தன்னுடைய பைக்கில் ஏற்றுக்கொண்டு அவருடைய வீட்டில் விட்டு விட்டு வரும் வழியில் தான் இந்த ஒரு சம்பவம் அரங்கே இருக்கிறது. இவர் பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தபோது இஸ்லாமியர்கள் குழு ஒன்று, ஜந்தகட்டே அருகே வினய் குமாரை தாக்கியது. முஸ்லீம் பெண்ணுக்கு லிப்ட் கொடுத்ததன் பின்னணியில் அவருடைய பெயரையும் அவரது நோக்கத்தையும் கேட்டனர்.


திடீரென அந்த இந்து இளைஞன் மீது முஸ்லிம் கும்பல் தாக்குதல் நடத்தியது. "உங்கள் பெயர் என்ன என்று கும்பல் கேட்டது, அவர் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, ​​​ திடீரென அவரைத் தாக்கினர்" என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.


தாக்குதல் பற்றி கேள்விப்பட்டதும் அவரது நண்பர்கள் அபி மற்றும் யஷ்வந்த் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​​​அவர்களையும் கும்பல் தாக்கியது. சம்பவ இடத்தில் இருந்த அப்பகுதி மக்கள் அவரை விரட்டினர். மேலும் கூட்டத்தினர் அப்பகுதி மக்களை மிரட்டியதால் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான உலக பதிவு செய்யப்பட்ட விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Input & Image courtesy: Opindia News

Tags:    

Similar News