மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது.. தேர்வான தமிழ் எழுத்தாளர் தேவிபாரதி..

Update: 2023-12-21 01:58 GMT

மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 24 மொழிகளில் வெளியாகும் தலை சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு படைப்புகள் மொழி வாரியாக தேர்வு செய்யப்பட்டு விருதும், பரிசுத் தொகையும் டெல்லிக்கு அழைக்கப்பட்டு எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும். 2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு. தமிழில் ‘நீர்வழிப் படூஉம்’ என்ற புதினம் எழுதிய ராஜசேகரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகளை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.


ஒன்பது கவிதை புத்தகங்கள், ஆறு புதினங்கள், ஐந்து சிறுகதைகள், மூன்று கட்டுரைகள், ஒரு இலக்கிய ஆராய்ச்சி என மொத்தம் 24 மொழிகளில் படைக்கப்பட்ட படைப்புகளை எழுதியோருக்கு இவ்விருதுகள் அளிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மொழியிலும் மூன்று உறுப்பினர்களை கொண்ட நடுவர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


நீர்வழிப் படூஉம் நாவலை எழுதிய எழுத்தாளர் தேவி பாரதியை பொறுத்தவரை ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை பூர்வீகமாக கொண்டவர். இவரது இயற்பெயர் ராஜசேகரன் என்பதும் தேவி பாரதி என்ற பெயரில் பல படைப்புகளை இவர் வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் ‘நீர்வழிப் படூஉம்’ என்ற புதினம் எழுதிய ராஜசேகரன் என்ற தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு செப்பு பட்டயம், சால்வையுடன் ரூ.1 லட்சம் வழங்கப்படவுள்ளது. புதுதில்லியில் 2024-ம் ஆண்டு மார்ச் 12 அன்று கோபர் நிக்கர்ஸ் மார்க்கில் உள்ள காமனி அரங்கில் நடைபெறவுள்ள விழாவில் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படவுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News