அகில இந்திய அளவில் எந்த கூட்டணி ஜெயிக்கும்? சாணக்கியா கூறிய தகவல் என்ன?

Update: 2024-04-17 13:12 GMT

லோக்சபா தேர்தல் இன்னும் இரண்டு தினங்களில் நடைபெற இருக்கிறது. அது மட்டும் கிடையாது. இன்று தான் கடைசி கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் பிரச்சாரங்கள் நிறைவடைகிறது. இதற்காக பல்வேறு கட்சிகள் மக்கள் மத்தியில் பிரச்சாரத்திற்காக மும்மரமாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு மீடியாக்கள் மற்றும் ஊடகங்கள் மக்களின் கருத்துக்கணிப்புகள் அடிப்படையில் தேர்தலுக்கு முன்பாக எந்த கட்சி ஆட்சிக்கு வரும்? என்பது தொடர்பான முடிவுகளையும் வெளியிட்டு வருகிறார்கள்.


இந்த வகையில் சாணக்கியன் டிவி லோக்சபா தேர்தல் தொடர்பான மக்கள் கருத்து கணிப்பு நடத்தியது. அதனுடைய முடிவுகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. அகில இந்திய அளவில் எந்த கூட்டணி ஜெயிக்கும் என்பது தொடர்பாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 64 சதவீதங்களுடன் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


பா.ஜ.க 64 சதங்களுடன், காங்கிரஸ் 24 சதங்களுடன், மற்ற கட்சிகள் 12 சதவீதங்களுடன் முன்னிலையில் இருப்பதாக சாணக்யா டிவி செய்திகள் தற்போது செய்திகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News