இந்தியா வளர்ந்து வருவதை, காங்கிரஸ் ஏன் வெறுக்கிறது? மத்திய அமைச்சர் கேள்வி?

Update: 2024-04-25 14:03 GMT

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் மக்களை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்து விடுகிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் செய்தி நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியின் போது இது பற்றி அவர் தெளிவாக கூறியிருக்கிறார். இதில் அவர் கூறும் பொழுது, காங்கிரஸ் ஒருபோதும் எல்லைகளை பாதுகாக்கவில்லை. அவர்கள் ராணுவத்தை பலப்படுத்தவில்லை. இப்போது இந்தியாவின் அணு ஆயுதங்களை அழிப்பதாகப் பேசுகிறார்கள்.


எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் வளர்ந்து வருவதை, காங்கிரஸ் ஏன் வெறுக்கிறது? காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடனேயே மக்களை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்து விடுகிறது. இந்த ஆண்டு தேர்தல் வாக்குறுதியில், அவர்கள் இறந்த பிறகும் மக்களை மிரட்டி பணம் பறிப்பதைத் தொடர்வோம் என தெளிவாகக் கூறியுள்ளனர். இவர்கள் மக்களை மீண்டும் தங்கள் வசம் இருப்பதற்காக பல்வேறு புரட்சிகரமான வாக்குறுதிகளையும் வெளியிட்டு வருகிறார்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.


60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் காங்கிரஸ் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. எமர்ஜென்சியை அமல்படுத்திய கட்சி காங்கிரஸ். இந்த கட்சி நாட்டுக்குத் தேவையில்லை" என்று அவர் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News