பா.ஜ.க ஆட்சியில் மக்கள் வித்தியாசத்தை பார்க்கிறார்கள்.. பிரதமர் மோடி பிரச்சாரம்..

Update: 2024-04-30 11:37 GMT

10 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சி மற்றும் 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் வித்தியாசத்தை மக்கள் பார்க்கின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மாதா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசி இருக்கிறார். அப்பொழுது அது பற்றி அவர் கூறும் பொழுது, வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான ஆசி கேட்டு வந்துள்ளேன். மக்களின் அன்பே என்னை வலிமையாக்கி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்காக சேவை செய்ய ஒவ்வொரு நொடியும் நான் செலவு செய்து இருக்கிறேன் ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் வறுமை ஒழிப்பு பற்றி மட்டும் பேசுகிறார்கள்.


ஆனால் செயலில் இதுவரை செய்த பாடு கிடையாது. ஆனால், எங்கள் ஆட்சியில் சுமார் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டுள்ளேன். கடந்த 10 ஆண்டு பா.ஜ., ஆட்சியையும், 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியின் வித்தியாசத்தையும் மக்கள் பார்க்கின்றனர். பா.ஜ.க செயலில் செய்வதை மக்கள் உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.


மத்தியில் வலிமையான ஆட்சி அமையும் போது, எதிர்காலம் குறித்து அரசு கவனம் செலுத்தும். 60 ஆண்டுகளாக அவர்கள் சாதிக்காததை, 10 ஆண்டுகளில் நாங்கள் சாதித்து உள்ளோம். ரயில்வே, நெடுஞ்சாலை மற்றும் விமானத்துறையில் அதிகளவு முதலீடு செய்துள்ளோம். காங்கிரஸ் அதிக அளவில் செய்யாததை மக்களுக்காக உள் கட்டமைப்பை விரிவாக்குவதற்கு நாங்கள் செய்து இருக்கிறோம் என்று பிரதமர் மோடி பேசினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News