பெண்களுக்கு உரிய அதிகாரம் வழங்குவதில் பா.ஜ.க அரசு உறுதி.. பிரதமர் மோடி வாக்கு..

Update: 2024-05-06 15:24 GMT

பெண்களுக்கு உரிய அதிகாரம் வழங்குவதில் பாஜக அரசு உறுதியாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு இருக்கிறார். ஒடிசா மாநிலத்தில் உள்ள பெர்காம்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசும் பொழுது, பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பது பாஜக உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவர் கூறும் பொழுது நேற்று நான் அயோத்தியில் இருந்தேன். ராமரை தரிசனம் செய்தேன். ஒடிசா மக்களுக்கு நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்.


ஜூன் 4ம் தேதி அன்று நாங்கள் பாஜக சார்பில் முதல்வர் யார் என்று அறிவிப்போம். ஜூன் 10ம் தேதி பாஜக முதல்வரின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. ஒடிசாவில் முதன்முறையாக பாஜக ஆட்சி அமைய போகிறது. அது மட்டும் கொள்ளாதே பாஜக ஆட்சிக்கு ஒடிசா மாநிலத்திற்கு பட்ஜெட்டில் குறைவான பணம் தற்போது வரை ஒதுக்கியது கிடையாது என்று மோடி அவர்களின் குறிப்பிட்டு கூறியிருந்தார். மேலும் காங்கிரஸ் ஆட்சிகளின் பொழுது ரிமோட் கண்ட்ரோல் ஆட்சியாக குறைவாக பணம் தான் ஒடிசா மாநிலத்திற்கு ஒதுக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.


இளைஞர்கள், பெண்கள், மூத்த குடிமக்களுக்கான சுகாதார வசதிகள், சுற்றுலா மேம்பாடு என பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது. சொல்வதை நிறைவேற்றுவதுதான் பாஜக விளக்கம் அதை தொடர்ந்து செய்வோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவருக்கு நாட்டின் மிக உயரிய பதவியை வழங்கிய பெருமை பா.ஜ.க.வுக்கு தான். ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வழிகாட்டுதலின் கீழ் ஒடிசாவிற்கு என்னால் முடிந்த அளவு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News