இண்டி'க்கு வாக்களிப்பது வீண் என மக்களே உணர்ந்து விட்டனர் - பிரதமர் மோடி பதிவு!

Update: 2024-05-25 16:36 GMT

பாராளுமன்ற லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. மேலும் இதில் ஆறாம் கட்டமான தேர்தல் இன்று 7 மாநிலங்களில் 58 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. 

இந்த தேர்தலில், நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்மு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் ஆகியோர் வாக்குகளை செலுத்தினர். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் ஆறாம் கட்ட தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டு இருந்தார். 

அதில், இன்று நடைபெற்ற ஆறாம் கட்ட லோக்சபா தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இண்டி கூட்டணி ஆட்சிக்கு வராது என்பதால் அவர்களுக்கு வாக்களிப்பது வீண் என மக்கள் உணர்ந்து உள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Source : Dinamalar 

Tags:    

Similar News