வெற்றிப் பேரணிக்கு தயாராகும் பிரதமர் நரேந்திர மோடி!

Update: 2024-06-03 15:10 GMT

கடந்த ஒன்றரை மாதமாக நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. மேலும் ஆட்சி அமைப்பதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது.

இருப்பினும் தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளில் 350 இடங்களுக்கு மேல் பாஜக கூட்டணி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10 ஆண்டுகளின் தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சியை பாஜக பிடிக்கும் என கருத்துக்கணிப்பின் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வந்துள்ளதால் பாஜக தரப்பு குஷியாகி உள்ளது. அதோடு நாளை ஓட்டு எண்ணிக்கையின் போது பெரும்பான்மை நிலவரம் மாலைக்குள் கிட்டத்தட்ட தெரிந்து விடும்.

அந்த முடிவுகளில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் இருந்து பாஜக தலைமை அலுவலகம் வரை தொண்டர்கள் மத்தியில் வெற்றி பேரணி செல்ல திட்டமிட்டு இருக்கிறார். இந்த பேரணியில் பாஜகவினர் அதிக அளவில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Source : Dinamalar 


Tags:    

Similar News