ஹாட்ரிக் வெற்றியை வாரணாசியில் பதிவு செய்த பிரதமர் மோடி...

Update: 2024-06-04 12:41 GMT

மூன்றாவது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி 1.52 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடர்ந்து வருகிற நிலையில், உத்தர பிரதேசத்தில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி முதல் நான்கு சுற்றின் முடிவில் பின்னடைவில் இருந்து வந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

ஆனால் நான்கிற்கு பிறகு வந்த அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ச்சியாக அதிக ஓட்டுகளை பெற்று சுமார் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகளுடன் வெற்றியை சொந்தமாகி உள்ளார். பிரதமரின் இந்த வெற்றியானது காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 1.52 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களிலும் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்று வந்த பிரதமர் மூன்றாவது முறையாக இந்த முறையும், வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்று ஹார்ட்ரிக் வெற்றியை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதால் பாஜக தொண்டர்கள் அதை கொண்டாடி வருகின்றனர். 

Source : Dinamalar 

Tags:    

Similar News