பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சிப் பயணத்தில் நாடு மேலும் வளர்ச்சி அடையும்- கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சிப் பயணத்தில் நாடு மென்மேலும் வளர்ச்சி அடையும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-10 06:50 GMT

மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமராக மோடி பதவியேற்ற புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த கவர்னர் ஆர்.என். ரவி வெளியிட்ட வாழ்த்து செய்தி வருமாறு:-

தமிழ்நாட்டின் மகிழ்ச்சிகரமான சகோதர சகோதரிகள் தங்களின் அன்புத் தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடிக்கு மனமார்ந்த அன்பான மற்றும் சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார்கள். வறுமையற்ற, பிணி இல்லாத , கல்வியறிவின்மை போக்க, வீடற்றவர்கள் நிலை மாற மற்றும் பாகுபாடுகள் இல்லாத வளர்ச்சி அடைந்த பாரதத்தை கட்டி எழுப்புவதற்காக நரேந்திர மோடி தனது மூன்றாவது ஆட்சிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். பிரதமருக்கு நாடு முழுவதும் ஒரே குடும்பம் என்பதும் தமிழ்நாட்டு மக்கள் அவரது இதயத்தில் வாழ்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். தமிழ் மக்கள் அவரை நேசிக்கிறார்கள்.

தங்களின் இதயத்தில் பிரதமர் வாழ்கிறார் என்பதை அவர் அறிய வேண்டும் என விரும்புகிறார்கள். பிரதமரின் தலைமையில் நாடும் மக்களும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் அறிவார்கள். கடவுள் அவருக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளைக் கொடுத்து தேசத்தின் நலனுக்காக அவரது அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை வழங்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


SOURCE :Newspaper 

Tags:    

Similar News