திமுகவை நேரடியாக குற்றம் சாட்டிய விஜய்: கள்ளக்குறிச்சியில் ஆறுதல்!

Update: 2024-06-21 10:04 GMT

கடந்த வருடம் கள்ளச்சாராயத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்பொழுது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பெண்கள் உட்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மற்றும் செயலும் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.


கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று தமிழக அரசை நேரடியாகவே குற்றஞ்சாடி பதிவிட்டுள்ளார். 


மேலும், அவர் கள்ளக்குறிச்சிக்கு சென்று கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மருத்துவமனையை தொடர்ந்து விஜய் கருணாபுரம் கிராமத்திற்கு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Tags:    

Similar News