டெல்லி ஜனாதிபதி மாளிகையில் கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் அகமத் அல் தானிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.வளைகுடா நாடான கத்தார் மன்னர் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார் அவரை நேற்று பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்தில் சென்று நேரில் வரவேற்றார். இன்று டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பிரதமர் மோடி ஆகியோர், கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு,பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கத்தார் மன்னரை நேரில் சந்தித்தனர்.இன்று பேச்சு வார்த்தை நடந்து முடிந்தவுடன் இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்திப்பார்கள்.இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன என அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வளர்ந்து வரும் நாடான இந்தியாவிற்கு வளைகுடா நாடான கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானின் வருகை பெருமைக்குரியதாகவும் முன்னேற்றத்திற்கு சிறப்பானதாகவும் அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.ஒப்பந்தங்கள் பல கையெழுத்தாக உள்ள நிலையில் அவை நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இது மோடி அரசுக்கு கிடைத்த பெருமையான அங்கீகாரம் ஆகும்.