காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரமான சம்பவத்திற்கு பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் மத்திய அரசு துண்டித்தது, பயங்கரவாதத்திற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் அட்டாரி வாகா எல்லையை மத்திய அரசு மூட உத்தரவிட்டுள்ளது மேலும் பாகிஸ்தானியர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறும்படியும் அறிவித்துள்ளது
இந்த நிலையில் அட்டாரி வாகா எல்லையில் கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் கொடி இறக்கும் நிகழ்வு தினமும் நடைபெற்று வருகிறது அந்த நிகழ்வின் பொழுது இருநாட்டு வீரர்களின் கைக்குலிக்கி கொள்வார்கள் ஆனால் தற்போது பிஎஸ்எஃப் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க வேண்டாம் என கூறியுள்ள அந்த அமைப்பு அங்குள்ள கதவுகளை மூடி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளது
இதனால் வாகா எல்லையில் கதவுகளை மூடிய படியே கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது