மோடி அரசின் முன்னோடி முயற்சி: பாலத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரங்கள்!

Update: 2025-05-22 09:02 GMT

கோவாவில் உள்ள புதிய ஜுவாரி பாலத்தின் மேல் அமைக்கப்படவுள்ள அடையாள சின்னமாக விளங்க இருக்கும் கண்காணிப்பு கோபுரங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலை நோக்குப் பார்வை கொண்ட தலைமை, நிதின் கட்கரியின் முன்னோடி முயற்சி மற்றும் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்தின் அர்ப்பணிப்புள்ள முயற்சிகள் அனைத்தும் இதைச் சாத்தியமாக்கியுள்ளன.


ரூ 270.07 கோடி செலவில் ஐந்து ஆண்டுகளில் கட்டப்படவுள்ள இந்தத் திட்டத்தில், பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் போன்று கண்காணிப்பு கோபுரங்கள் இடம்பெறும். சுழலும் உணவகம் மற்றும் கலைக்கூடத்துடன், இது உலகளாவிய சுற்றுலாத் தலமாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. கோவாவின் வளமான சுற்றுலா நிலப்பரப்பில் ஒரு அடையாளச் சின்னமாக மாறத் தயாராக உள்ளது. வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, இயக்குதல் மற்றும் பரிமாற்றம் மாதிரியில் செயல்படுத்தப்படும் இந்த முயற்சியால் அரசுக்கு நிதிச் சுமை இருக்காது. சலுகை வழங்குபவர் முழு கட்டுமானத்திற்கும் பொறுப்பாவார் மற்றும் 50 ஆண்டுகள் சலுகை காலத்திற்கு இதனை இயக்குவார். இரண்டு பைல் கேப் அஸ்திவாரங்களில் கோபுரங்களுக்கு இடையில் வைக்கப்படும் ஒவ்வொரு கோபுரமும் 125 மீட்டர் உயரத்திற்கு இருக்கும், 8.50 மீட்டர் x 5.50 மீட்டர் தண்டு பரிமாணங்களைக் கொண்டிருக்கும்.

மேல் மட்டங்களில் 22.50 மீட்டர் x 17.80 மீட்டர் குறைந்தபட்ச பரிமாணங்களைக் கொண்ட 2 விரிவான தளங்கள் இருக்கும், வெளியில் பார்க்கும் வகையில் காப்ஸ்யூல் மின்தூக்கி பொருத்தப்பட்டிருக்கும். பார்வையிடும் காட்சியகங்கள், சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் அதிநவீன சுற்றுலா வசதிகள் கொண்ட இந்தக் கோபுரங்கள், கடல் பகுதியில் இருபுறமும் 7.50 மீட்டர் அகலத்தில் ஒரு பிரத்யேக நடைபாதை பாலம் கட்டப்படும்.ஸஇது தடையற்ற சுற்றுலா அணுகலை அனுமதிக்கிறது. பாலத்தின் இரு முனைகளிலும் பார்க்கிங் வசதிகள் வழங்கப்படும், இது பார்வையாளர்களுக்கு வசதியை உறுதி செய்யும்.

Tags:    

Similar News