மே 1 அமலுக்கு வரும் புதிய விதி.. SMS-இல் ஏற்பட இருக்கும் பெரிய மாற்றம்!

போலியான குறுஞ்செய்திகள் மற்றும் போன் கால்களில் இருந்து பாதுகாக்கும் புதிய விதி.

Update: 2023-04-30 01:15 GMT

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அவர்களின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்தி சேவைகளில் செயற்கை நுண்ணறிவு ஸ்பேம் பில்டர்ஸ்களை நிறுவ உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் இந்த ஒரு சிறப்பான அறிவிப்பின் மூலமாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது குறிப்பாக போன் கால்களில் வரும் போலியான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளில் இருந்து பயனாளர்களை பாதுகாக்க பில்டர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது.


இந்த ஃபில்டர்களை அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் மே ஒன்றாம் தேதிக்கு முன் நிறுவ வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் இதுபோன்ற AI ஃபில்டர்களின் வசதியை ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த புதிய விதியின்படி ஜியோ தனது சேவைகளில் AI பில்டர்களை நிறுவ தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.


தற்போது, ​​எப்போது ஜியோ தொடங்கும் என்பதை பற்றி தகவல்கள் இல்லை. ஆனால் இந்தியாவில் மே ஒன்றாம் தேதி முதல் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களிலும் பயன்பாடு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போலி அழைப்புகள் மற்றும் செய்திகளை தடுக்க TRAI விதிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் கீழ், 10 இலக்க மொபைல் எண்களுக்கு செய்யப்படும் விளம்பர அழைப்புகளை நிறுத்துமாறு டிராய் கோரியுள்ளது. இது தவிர, அழைப்பாளரின் பெயர் மற்றும் புகைப்படத்தைக் காண்பிக்கும் அழைப்பாளர் IT அம்சத்தையும் TRAI கொண்டு வந்துள்ளது.

Input & Image courtesy: Zee News

Tags:    

Similar News