கொரோனா தொற்றை அரசியலாக்க கூடாது: அறிவுரை கூறும் WHO உறுப்பினர் !

கொரோனா-தொற்றை-அரசியல்-ஆக்கக்கூடாது.

Update: 2021-08-01 13:03 GMT

உலகின் ஒவ்வொரு நாடுகளிலும் கொரோனா தன்னுடைய கோரத்தாண்டவத்தை நடத்தி வருகின்றது. குறிப்பாக இதில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அனைத்து நாடுகளையும் மிகவும் மோசமான நிலையில்தான் வைத்து உள்ளது என்றே கூறலாம். அதிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் நிலைமை மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை சந்தித்துக்கொண்டிருக்கும் நாடுகளின் நிலமை இன்னும் பின்தங்கி தான் உள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குநர் மைக் ரேயின் அவர்கள் கொரோனா தொற்றை உறுப்பு நாடுகள் அரசியலாக்க கூடாது என்று கூறியுள்ளார். 


இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள், இந்த மோசமான பெருந்தொற்றை அரசியலாக்க வேண்டாம். நாம் அறிவியலை அரசியலாக்க கூடாது என்றும் அறிவோம் ஆனால் தற்போது அறிவியல் அரசியலாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதைப் போன்று தற்போது உள்ள இந்த தொற்று மனிதர்களுடைய உயிர் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். எனவே இவற்றை அரசியல் ஆக்குவதன் மூலம் பல்வேறு மனித உயிர்களை நாம் அனைவரும் சமம் ஆகும் என்று அவர் கூறி, கொரோனாவை அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு பயன்படுத்த வேண்டாம்  எனவும் அறிவுரை கூறியுள்ளார். 


இதுபற்றி சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் படி, உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனரின் இந்த தகவல் மற்ற நாடுகளை முன்னிறுத்திக் கொண்டு செல்லும் என்றும் கூறியுள்ளது. ஏற்கனவே சீனாவில் இருந்து தான் கொரோனா பரவியது என்று கூறப்பட்டதும், அதற்கான WHO உறுப்பினர்கள் அங்கு ஆய்வு மேற் கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இறுதியில் சீனாவில் இருந்துதான் நிச்சயம் கொரோனா தோற்று பரவியது என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறியதும் கவனிக்கத்தக்கது. 

Input: https://www.indiatvnews.com/news/world/who-members-oppose-politicisation-of-covid-origin-tracing-report-coronavirus-pandemic-latest-international-news-updates-723441

Image courtesy: Indiatv news 


Tags:    

Similar News