தடையற்ற வர்த்தகத்துக்கான பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திட மோடி மறுப்பு! ராமதாஸ் பாராட்டு

தடையற்ற வர்த்தகத்துக்கான பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திட மோடி மறுப்பு! ராமதாஸ் பாராட்டு

Update: 2019-11-05 10:02 GMT

ஆசியான் கூட்டமைப்பில் உள்ள 10 நாடுகளுடன், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 6 நாடுகளும் பங்கேற்கும் ஆசிய மண்டல பொருளாதார கூட்டு மாநாடு பாங்காக்கில் நடைபெற்றது. அதில் 16 நாடுகளும் இணைந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தின,மேலும் இந்த ஒப்பந்தம் காந்திய சிந்தனைகளுக்கு எதிரானது என்று கூறிய மோடி, ஒப்பந்தத்தில் கையெழுத்திட தனது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்



முன்னதாக, இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மலிவான விவசாய உற்பத்திப் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் இந்திய சந்தையில் குவிந்து, உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என விவசாயிகளும், வணிகர்களும் அச்சம் தெரிவித்திருந்தனர்.



தடையற்ற வர்த்தகத்துக்கான மண்டல பொருளாதார ஒப்பந்தத்தில் (RCEP) கையெழுத்திட பிரதமர் மோடி மறுத்திருப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தடையற்ற வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் இதேநிலை நீடிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.




https://twitter.com/drramadoss/status/1191584770016198656?s=19

Similar News