டோனியின் வயதை காரணம் கட்டி கோபமாக பேசிய - சர்பராஸ் அகமதுயின் மனைவி!!

டோனியின் வயதை காரணம் கட்டி கோபமாக பேசிய - சர்பராஸ் அகமதுயின் மனைவி!!

Update: 2019-10-22 06:10 GMT

கணவனை பற்றிய கேள்விக்கு டோனியின் வயது என்ன ஆகிறது? அவர் என்ன ஓய்வு பெற்றுவிட்டாரா? என சர்பராஸ் அகமதுவின் மனைவி கோபமாக உரையாடினார் .


சர்பராஸ் அகமதுயை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் மற்றும் டெஸ்ட், டி20 ஓவர் தொடர் அணியிலிருந்தும் சமீபத்தில் நீக்கினார். சர்பராஸ் அகமதுக்கு பதிலாக பாபர் அசாம் மற்றும் அசார் அலி ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் கேப்டன்களாக நியமிக்கப்பட்டனர்.


அதுமட்டும் இல்லாமல் சர்பராஸ் ஆஸ்திரேலியாவின் எதிரான தொடர்களில் இடம் பெறவில்லை. ஒட்டு மொத்தமாக வெளியேற்றப்பட்டார். சர்பராஸ் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார். விரைவில் முடிவை பற்றி அறிவிப்பார் என செய்திகள் வெளிவந்தன ஆனால் அவருக்கு 32 வயது தான் ஆகிறது.


இது குறித்து நிருபர்கள் அவர் மனைவி குஷ்பாத் சர்பிராஸ் அகமதுவிடம் கேட்ட போது அதற்கு அவர் டோனியோடு ஒப்பிட்டு பேசி பதில் அளித்தார்.


என் கணவர் ஏன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும். இப்போது அவருக்கு 32 வயதுதான் ஆகிறது. டோனிக்கு இப்போ என்ன வயது ஆகிறது தெரியுமா?. ஆனால் அவர் தற்போது இன்னும் விளையாடி வருகிறார்தானே, அவர் என்ன ஓய்வு பெற்றுவிட்டாரா?. என்னுடைய கணவர் மறுபடியும் வலிமையுடன் திரும்பி வருவார் என கூறினார்.


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனது கணவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்க போகும் செய்தி 3 நாட்களுக்கு முன்பே தெரியும். அவர் சோர்வு அடையவில்லை, நம்பிக்கை இழந்து விடவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்.


இவ்வாறு சர்பிராஸ் அகமது மனைவி கூறினார்.


Similar News