தாரமங்கலத்தில் பெருமாள் கோவில் பூட்டை உடைத்து ஏழு சாமி சிலைகள் திருட்டு!

தாரமங்கலத்தில் உள்ள பெருமாள் கோவிலில் பூட்டி உடைத்து ஏழு சாமி சிலைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-05-23 02:00 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊர்சாவடி அருகே பழமை வாய்ந்த பஜனை பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியைச் சேர்ந்த குமரவேல் என்பவர் பூசாரி ஆக உள்ளார். இந்த கோவிலில் முக்கால் அடி உயரம் கொண்ட பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய மூன்று ஐம்பொன் சிலைகளும் அரை அடி உயரம் கொண்ட 5 சாமி சிலைகளும் உள்ளன. நேற்று முன்தினம் இரவு பூசாரி குமரவேல் கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல பூசாரி கோவிலுக்கு வந்தார் . அந்த கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் உள்ளே  சென்று பார்த்த போது கோவிலில் இருந்த ஏழு சாமி சிலைகள் திருட்டு போயிருந்ததை கண்ட அதிர்ச்சி அடைந்தார். கோவிலில் இருந்த கருடாழ்வார் சிலை மட்டும் தப்பியது. கோவிலில் சாமி சிலைகள் திருட்டுப் போன தகவல் பரவியதும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த தடயங்களை பதிவு செய்தனர். போலீசாரின் விசாரணையில் நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் கோவில் பூட்டை உடைந்து அங்கிருந்த சாமி சிலைகளை திருடி சென்றது தெரியவந்தது . சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சாமி சிலைகளை திருடிய மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Similar News