சிவகங்கையில் தேவர் குருபூஜையை முன்னிட்டு 144 தடை உத்தரவு!

மருதுபாண்டியர் தேவர் குருபூஜை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு.

Update: 2022-10-23 23:37 GMT

மாமன்னர்கள் மருதுபாண்டியர் மற்றும் தேவர் குருபூஜை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது l. மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் மற்றும் தேவர் குருபூஜை செய்யும் முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று சனி ஞாயிற்றுக்கிழமை முதல் வருகின்ற 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதற்கான உத்தரவை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூரன் ரெட்டி பிறப்பித்துள்ளார். நாளை 24ம் தேதி மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்கள் தூக்கிலிடப்பட்ட நினைவு தினம் திருப்பத்தூரில் அரசு சார்பில் 27ஆம் தேதி அவர்களின் சமாதி அமைந்துள்ளது. காளையார் கோவை சமுதாய மக்கள் சார்பில் குருபூஜை விழாவாக அனுசரிக்கப்பட உள்ளது.


எனவே நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் சமுதாய மக்கள் ஏராளமானவர் வந்த அஞ்சலி செலுத்துவார்கள். மேலும் அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகின்ற 30ஆம் தேதி ராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 31ம் தேதி வரை 114 தடை உத்தரவு தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் அறிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News