ரிப்பன் வெட்ட புதிய ஆயுதம் !டிரெண்டான பாகிஸ்தான் அமைச்சர் !

Viral News.

Update: 2021-09-04 13:36 GMT

பொதுவாக கடைதிறப்பு விழாக்களில் ரிப்பன் வெட்டுவதற்கு கத்தரிகோல் கத்தி போன்றவற்றை பயன்படுத்துவர் ஆனால் பாகிஸ்தானில் புது வித ஆயுதத்தை பயன்படுத்தி ரிப்பன் கட் செய்துள்ளார் அந்நாட்டு அமைச்சர்.

அப்படி என்ன ஆயுதம் ஏகே 47னா அல்லது அணுகுண்டா என நீங்கள் யோசிக்கும் போது அவர் ஈசியா தனது பற்கள் மூலம் ரிப்பனை கட் செய்துள்ளார்.

பாகிஸ்தான் அமைச்சர் ஃப்யாஸ் உல் ஹசன் ராவல்பிண்டியில் உள்ள ஒரு எலக்ட்ரானிக் கடை திறப்பு விழாவிற்கு சென்றார். கத்தரிகோலால் ரிப்பனை வெட்ட முயன்றார் கத்தரிக்கோல் சரியாக வெட்டவில்லை. ஒருகட்டத்தில் விரக்தியின் விளிம்பிற்கே சென்ற அவர் தனது பற்களால் ரிப்பனை கட் செய்து கூலாக கடையினுள் நுழைகிறார். இந்த வீடியோவை அமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர நெட்டிசன்கள் அதனை டிரெண்டாக்கினர்.

Tags:    

Similar News