ஆப்கானில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கல்வி வேண்டும்: UNESCO வலியுறுத்தல் !

ஆப்கானில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வியை காக்க வேண்டும் என்று UNESCO வலியுறுத்துகிறது.

Update: 2021-09-11 13:33 GMT

ஆப்கானிஸ்தானை தற்போது தங்களுடைய முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள தலிபான்கள் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்த வந்துள்ளார்கள். அங்கு இடைக்கால ஆட்சியை நிறுவும் முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அங்கு அமைச்சர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஆட்சியை ஏற்படுத்த இருக்கும் தலிபான்கள் பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் தருவார்கள் என்பது கேள்விக்குறிதான். கடந்த 1995-2001ஆம் ஆண்டு ஆட்சியைப் போல் இல்லாமல் பெண்கள், சிறுமிகளுக்குக் கல்வி உரிமை வழங்கப்படும். பெண்கள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப் படுவார்கள் என்று தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


ஆனால், திடீரென பெண்கள் வேலைக்குச் செல்லத் தடையும், பெண்கள் விளையாட்டுக்குத் தடை விதித்தும் தலிபான்கள் உத்தரவிட்டனர். இதனால் தலிபான்கள் ஆட்சி வந்துள்ளதால், பெண்கள், குழந்தைகள் கல்வி வளர்ச்சியைக் காப்பாற்ற வேண்டும் என்று UNESCO அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, "ஆப்கனில் அமெரிக்க, நேட்டோ படை பாதுகாப்பில் ஜனநாயக ஆட்சி மலர்ந்தபின், பள்ளிகளில், கல்லூரிகளில் பெண்கள், சிறுமிகள், உள்ளிட்ட மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. கல்வியுறிவு சதவீதமும் உயரத் தொடங்கியது. ஆப்கனில் தலிபான் ஆட்சியில் இருந்ததைவிட தற்போது பெண்களின் கல்வியறிவு சதவீதம் இரட்டிப்பாகியுள்ளது.


ஆனால், தலிபான் ஆட்சிக்கு வந்தபின் அந்த உதவிகள் நிறுத்தப்பட்டன. கல்லூரிகள், பள்ளிகளில் மாணவ, மாணவிகள் இணைந்து படிக்கும் முறைக்கும் தலிபான்கள் தடை விதித்தனர். ஷரியத் சட்டப்படி, பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருகிறார்கள். இதனால் எதிர்காலத்தில் ஆப்கனில் உள்ள பெண்கள், சிறுமிகள் கல்வி பாதிக்கும் அபாயம் இருப்பதால், இப்போதுள்ள வளர்ச்சியைப் பாதுகாக்க வேண்டும்" என்று UNESCO சார்பில் தற்பொழுது தெரிவித்துள்ளது. 

Input & image courtesy:Market Watch


Tags:    

Similar News