200 ஆண்டுகள் பழமையானது ஹோமியோபதி சிகிச்சை... இதை மட்டும் கட்டாயம் அனைவரும் செய்ய வேண்டுமாம்!

நாட்டின் நலனுக்காக குடிமக்கள் நாள்தோறும் 1 மணிநேரம் தங்களது உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.

Update: 2023-04-12 01:22 GMT

200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது தான் நம் நாட்டின் ஹோமியோபதி சிகிச்சை என்பது. குறிப்பாக பல்வேறு நோய்களுக்கு இயற்கையான மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்படும் ஹோமியோபதி பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் மக்களை நோயிலிருந்து குணப்படுத்தும். புதுடில்லியில் நடைபெற்ற உலக ஹோமியோபதி தினத்தை ஒட்டி, பேசிய துணை குடியரசுத் தலைவர் இத்தகைய கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்.


நாட்டின் நலனுக்காக குடிமக்கள் நாள்தோறும் ஒரு மணிநேரம் தங்களது உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், உலக ஹோமியோபதி தினத்தையொட்டி புது டெல்லியில் விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்ற அறிவியல் மாநாடு தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.


நமது நாட்டில் 200 ஆண்டு பாரம்பரியம் கொண்ட ஹோமியோபதி மருத்துவம் கடந்த சில ஆண்டுகளாக நமது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய காரணியாக விளங்குகிறது என்று அவர் கூறினார். ஹோமியோபதி இயற்கையுடன் இணைக்கிறது என்றும் உலகில் 2-வது மிகப்பெரிய விரைவாக வளர்ச்சியடைந்து வரும் மருத்துவமுறை ஹோமியோபதி என்பதை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News