Kathir News
Begin typing your search above and press return to search.

மகாசமாதி அடைந்த பூஜ்யஸ்ரீ ஓம்காராநந்தர் சுவாமிகள் - தலைவர்கள் அஞ்சலி!

மகாசமாதி அடைந்த பூஜ்யஸ்ரீ ஓம்காராநந்தர் சுவாமிகள் - தலைவர்கள் அஞ்சலி!

ShivaBy : Shiva

  |  11 May 2021 8:39 AM GMT

வேத நெறி தழைப்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த உத்தமர் ஸ்ரீஸ்வாமி சித்பவானந்தா ஆஸ்ரமத்தின் சுவாமிஜி பூஜ்யஸ்ரீ ஓம்காராநந்தர் நித்திய சமாதி அடைந்தார்







ஆழ்ந்த கல்வி ஞானம் கொண்ட இவர் சம்பிரதாயங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை துல்லியமாக எடுத்து வைக்கும் வல்லமை பெற்றவர். மகாஞானி, தர்மத்தை காக்கும் பணியில் தம்மை தானாகவே ஈடுபடுத்திக் கொண்ட பூஜ்யஸ்ரீ ஓம்காராநந்தர் சுவாமிகள் நித்திய சமாதி அடைந்து அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளார்





அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுவாமிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் உடல்நலம் பெற வேண்டும் என்பதற்காக பக்தர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். மதுரையில் சிகிச்சை பெற்று வந்த அவரை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன

















இந்நிலையில் நேற்று மாலை 5.40 மணி அளவில் சுவாமி மகாசமாதி அடைந்தார். அவரது மறைவிற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 65 வயதான பூஜ்யஸ்ரீ ஓம்காராநந்தர் சுவாமிகள் இந்தியாவின் ஆன்மீக விழுமியங்களுக்கும் கலாச்சார மரபுகளுக்கும் புத்துயிர் அளிக்கும் பணியை மேற்கொண்டார்.

ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் நிறுவனர் திருப்பரைத்துரை ஸ்வாமி சித்பவானந்தாவிடமிருந்து சன்னகயாசம் பெற்றுக் கொண்ட பின் பூஜியஸ்ரி சுவாமி தயானந்த சரஸ்வதியின் முன்னணி சீடர்களில் ஒருவரான பூஜியஸ்ரி சுவாமி பரமார்த்தானந்தாவிடம் வேதாந்தத்தைப் படித்தார்.

தேவாரம், திருவாசகம், திருமந்திரம், தாயுமானவர் பாடல்கள், பாரதியார் பாடல்கள் மற்றும் திருக்குறள் போன்ற புனித நூல்களின் சாரத்துக்கு இவர் அளித்த விளக்க உரைகள் இன்றைய தலைமுறையினருக்கு அவற்றின் மதிப்பை அறக மிகவும் உதவிகரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News