Kathir News
Begin typing your search above and press return to search.

உண்மை அடையாளத்தை மறைத்து இரண்டு இந்து பெண்களை ஏமாற்றி திருமணம்!

உண்மை அடையாளத்தை மறைத்து இரண்டு இந்து பெண்களை ஏமாற்றி திருமணம்!

JananiBy : Janani

  |  28 Feb 2021 10:47 AM GMT

இந்துவாக நடித்து இந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்யும் அவலம் நாட்டில் மற்றும் சுற்றியுள்ள அண்டை நாடுகளில் தொடர் சம்பவமாக இருந்து வருகின்றது. தற்போது பங்களாதேஷில் யூசுப் அலி என்ற முஸ்லீம் நபர் தனது உண்மை அடையாளத்தை மறைத்து இந்துவாக நடித்து இரண்டு பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.




முதலில் பங்களாதேஷில் பரிசல் மாவட்டத்தில் உள்ள தாப்ஸி பரோய் என்ற இந்து பெண்மணியைத் திருமணம் செய்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்து என்பதைக் கண்டறிந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். அலி பிப்ரவரி 8 இல் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

அலி எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தாப்ஸியை இந்து என்று கூறி இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளார். மேலும் இருவருக்கும் நான்கு வயதில் அபூர்பா என்ற குழந்தையும் உள்ளது. மேலும் அலி குழந்தை பிறந்தவுடன் அவர்களை விட்டுச் சென்றதாக காவல்துறை தெரிவிக்கின்றது.

மேலும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் அலி தனது அடையாளத்தை மறைத்து பிரிஷ்டி பேப்பரி என்ற இந்து பெண்ணை இரண்டாவது முறையாகத் திருமணம் செய்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு முதல் முதல் மனைவியான தாப்ஸி இதுகுறித்து அறிந்து காவல்துறையிடம் தகவலாளித்துள்ளார். பின்னர் உடனடியாக யூசுப் அலி கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டதாக OC தெரிவித்தார்



இதுபோன்று தங்கள் உண்மை அடையாளத்தை மறைத்து இந்து பெண்களை ஏமாற்றும் குற்றம் லவ் ஜிஹாத் என்ற பெயரில் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனைத் தடை செய்வதற்குப் பல சட்டங்களும் அமல்படுத்தப் படுகின்றன. மேலும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் இதை யுக்தியாகக் கையாண்டு வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News