Kathir News
Begin typing your search above and press return to search.

தேசிய சரிபார்ப்பு முடிந்ததும் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் செயல்முறை தொடங்கும்!

தேசிய சரிபார்ப்பு முடிந்ததும் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் செயல்முறை தொடங்கும்!

MuruganandhamBy : Muruganandham

  |  12 March 2021 2:51 AM GMT

ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடியை உருவாக்குவது குறித்து கவலை கொண்ட ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் பிரதிநிதிகள், இன்று ஜம்முவிற்கு விரைந்து வந்து, ரோஹங்கியா முஸ்லிம்ஸைச் சந்தித்து, அங்குள்ள நிலைமையை மதிப்பீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

யு.என்.எச்.சி.ஆர் பிரதிநிதிகளின் நான்கு உறுப்பினர் குழு, ஜம்மு புறநகரில் உள்ள கிரியானி தலாப் மற்றும் பதிண்டியின் அருகிலுள்ள பகுதிகளை பார்வையிட்டது.

அந்த குழு சில ரோஹிங்கியாக்களுடன் உரையாடி அவர்களின் வாழ்வைப் பற்றி விசாரித்தது. இது தவிர, யு.என்.எச்.சி.ஆரின் பிரதிநிதிகள் பதிந்தியின் கிரியானி தலாபில் அமைந்துள்ள உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனமான சேவ் தி சில்ட்ரன் ஒன்றின் தலைவரையும் சந்தித்தனர்.

ஜம்மு-காஷ்மீர் அரசாங்கம் 175 ரோஹிங்கியாசின் ஹிரா நகர் சிறையில் தடுத்து வைத்து சில நாட்களுக்குப் பிறகு இந்த குழு ஜம்முவுக்கு பயணம் செய்தது. யூனியன் பிரதேச நிர்வாகத்தின்படி, சரிபார்ப்பு செயல்பாட்டின் போது, ​​இந்த 175 ரோஹங்கிய மக்கள் சட்ட ஆவணமின்றி இருப்பதைக் கண்டறிந்தனர். "அதனால்தான் நாங்கள் அவர்களை ஹிரா நகரில் வைத்திருக்கும் மையத்திற்கு மாற்றினோம்" என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐ.நா பிரதிநிதிகள் இந்த விவகாரத்தில் அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொள்வார்கள். ஜம்முவில் வசிக்கும் ரோஹிங்கியாக்களை தடுத்து வைக்கும் நடவடிக்கை, சட்டவிரோதமாக குடியேறியவர்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. அவர்கள் பல ஆண்டுகளாக ஜம்முவில் தங்கியுள்ளனர்.

ரோஹிங்கியாக்களை நாடு கடத்துமாறு பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து, 2017 ல், பாஜக அரசு, சட்டவிரோதமாக வாழும் ரோஹிங்கியா அகதிகளை அடையாளம் கண்டு நாடுகடத்த ஆரம்பிக்குமாறு மாநிலங்களை கேட்டுக் கொண்டது.

தேசிய சரிபார்ப்பு முடிந்ததும், இந்த சட்டவிரோத குடியேறியவர்களை நாடு கடத்தும் செயல்முறை தொடங்கப்படும். இந்தியாவில் 40,000 ரோஹிங்கியாக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவர்களில் குறைந்தது 16,500 பேர் யு.என்.எச்.சி.ஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News