Kathir News
Begin typing your search above and press return to search.

பிரச்சாரத்திற்கு தனி விமானம் எடுத்து, தமிழக வானில் பறக்கும் ஸ்டாலின்! எல்லாம் மக்கள் பணம் தானே? நமக்கென்ன கவலை?

பிரச்சாரத்திற்கு தனி விமானம் எடுத்து, தமிழக வானில் பறக்கும் ஸ்டாலின்! எல்லாம் மக்கள் பணம் தானே? நமக்கென்ன கவலை?

MuruganandhamBy : Muruganandham

  |  20 March 2021 1:30 AM GMT

தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து மாலை கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக தஞ்சையில் பிரச்சாரத்தை முடித்துகொண்டு, சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் வந்த ஸ்டாலின், அங்கிருந்து தனி சிறப்பு விமானம் மூலம் கோயம்புத்தூர் சென்றார்.

மு.க. ஸ்டாலினை, திருச்சி விமான நிலையத்தில் திமுக முதன்மை செயலாளரும் மேற்கு தொகுதி திமுக வேட்பாளருமான கே.என். நேரு தலைமையில், மாநகரச் செயலாளர் அன்பழகன், மத்திய மாவட்டப் பொறுப்பாளர் வைரமணி, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் தனி விமானத்தில் கோவை சென்றார்.

ஏற்கனவே பல முறை இலட்சக்கணக்கில் பணம் செலவழித்து தனி விமானத்தில் பறந்தவர் ஸ்டாலின். தற்போது தேர்தல் பிரச்சரதிற்கும் அதே பாணியை கையாள்கிறார். கூட்டணி கட்சிகளின் தயவில் எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டுமென துடிக்கிறார்.

1960-களில் தொடங்கி திமுக கூட்டணி இல்லாமல் ஒரு தேர்தலைக் கூட தமிழக மக்கள் சந்தித்தது கிடையாது. தமிழக முதல்வராக கருணாநிதி 5 முறை இருந்திருக்கிறார். இன்றும் கூட கூட்டணி இல்லாமல் திமுகவால் ஒரு பஞ்சாயத்து தேர்தலைக் கூட ஜெயிக்க முடியாது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News