Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த அலை பரவுவதை தடுக்க ஆயத்தம்! இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பை தீவிரமாக கண்காணிக்கிறது மத்திய அரசு!

அடுத்த அலை பரவுவதை தடுக்க ஆயத்தம்! இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பை தீவிரமாக கண்காணிக்கிறது மத்திய அரசு!

MuruganandhamBy : Muruganandham

  |  20 March 2021 1:45 AM GMT

இந்தியாவில் சில மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39,726 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 25,833 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப்பில் 2,369 பேருக்கும், கேரளாவில் 1,899 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

8 மாநிலங்களில் தினசரி கொவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாநிலங்களுடன் மத்திய அரசு, தொடர்ந்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

பரிசோதனைகளை அதிகரித்து, தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களைக் கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் உத்திகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தொற்று பாதிப்பு ஏற்பட்ட நபரிடம், முதல் 72 மணி நேரத்தில் தொடர்பு கொண்ட நபர்கள் குறைந்தது 20 பேரையாவது கண்டறிந்து தனிமைப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைரஸ் வகைகளைக் கண்டறிய, மரபணு சோதனைக்கு மாதிரிகளை அனுப்பும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் 10 பரிசோதனைக் கூடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் கூட்டத்தை குறைக்கும்படியும், கொவிட் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தடுப்பூசி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணி வரை, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை நெருங்கியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News