Kathir News
Begin typing your search above and press return to search.

கணக்கில் தான் தி.மு.க அப்படி இப்படி! இப்போ விஞ்ஞான அறிவிலும் கோழி முட்டை! ஜாமர் வைத்து வாக்கெடுப்பு மெஷினை முடக்க வேண்டுமாம்!

கணக்கில் தான் தி.மு.க அப்படி இப்படி! இப்போ விஞ்ஞான அறிவிலும் கோழி முட்டை! ஜாமர் வைத்து வாக்கெடுப்பு மெஷினை முடக்க வேண்டுமாம்!

MuruganandhamBy : Muruganandham

  |  25 March 2021 2:13 AM GMT

தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளில் ஜாமர் கருவி பொருத்த வேண்டும் என்று தி.மு.க தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான மனுதாக்கல் நிறைவு பெற்று இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது. அனைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில், அந்த மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.இந் நிலையில், தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளில் ஜாமர் கருவி பொருத்த திமுக வலியுறுத்தியுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியும் என்பதை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்துக்கு அக்கட்சியின் கலாநிதி வீராசாமி கடிதமும் எழுதியுள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியும் என்பது சர்வதேச கருத்தரங்கில் நிரூபணமாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கும் இயந்திரம் ஒரு நெட்வொர்க் இயந்திரம் இல்லை. அது தரவுகளை பதிவு செய்ய தன்னிச்சையாக செயல்படக்கூடிய கருவி.

அதுவும் செல்போன் சிக்னலை மொத்தமாக முடக்கக்கூடிய ஜாமர் வைத்து முறைகேட்டை தடுக்க வேண்டும் என திமுக எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளது, மருத்துவம் படித்திருந்தும் அவருடைய அறிவியல் அறிவு எந்த நிலையில் இருக்கிறது என்பதை காட்டுகிறது. திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீரசாமியின் மகன்தான், கலாநிதி வீராசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News