Kathir News
Begin typing your search above and press return to search.

உடலுறவு வைத்துக் கொண்டால் சாதி அழிந்து விடும் - ஆயிரம் விளக்கு திமுக வேட்பாளரின் அதிர்ச்சி பேச்சு!

உடலுறவு வைத்துக் கொண்டால் சாதி அழிந்து விடும் - ஆயிரம் விளக்கு திமுக வேட்பாளரின் அதிர்ச்சி பேச்சு!

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  3 April 2021 3:10 AM GMT

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பாக மருத்துவர் எழிலன் என்பவர் போட்டியிடுகிறார். தீவிர திராவிடர் கழக ஆதரவாளரும் பெரியாரியவாதியுமான இவர் பெரும் சர்ச்சைக்குரிய பின்னணியைக் கொண்டவர். இவர் இந்துக் கடவுள் நாராயணன் மற்றும் தேவ முனி நாரதரைப் பற்றி ஆபாசமாகப் பேசிய வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வைரலானது.

அந்த வீடியோவில் தான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பது போல் கெத்தாக பேசிய எழிலன் பின்னர் பொய் தகவல்களைப் பரப்புவதாக ட்விட்டரில் முதன் முதலில் வீடியோவை பதிவிட்டவர் மீது புகார் அளித்தது மட்டுமல்லாது ட்விட்டர் நிர்வாகத்தின் உதவியுடன் அந்த வீடியோவை அழிக்கவும் செய்தார்.

ஆனால் அப்போதிருந்து அவர் இந்து மதத்தையும் தமிழர் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி பேசிய வீடியோக்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன‌. அண்மையில் அப்படி வெளியாகி உள்ள ஒரு வீடியோ மூலம் தான் "தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்/பெண் உயர்சாதியைச் சேர்ந்த ஆண்/பெண்ணுடன் கலந்தால், அதாவது உடலுறவு கொண்டால் சாதி அழிந்து விடும்" என்று பேசியது தெரிய வந்துள்ளது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை அடைய வழிவகை செய்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை விட்டு விட்டு தமிழ்க் கலாச்சாரத்தின் மீது காறி உமிழும் வகையிலான இப்படி ஒரு ஆலோசனையை அவர் கொடுத்திருப்பதே திமுக சமூக நீதியைக் காத்த லட்சணத்தையும் இனிமேல் வென்று காக்கப் போகும் லட்சணத்தையும் காட்டுகிறது.


இப்படிப்பட்ட ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள் தங்கள் பெண் குழந்தைகளை பாதுகாப்பது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை மனதில் கொண்டு சரியான வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News